பகீர்! பள்ளி ஆட்டோ கவிழ்ந்து எல்கேஜி மாணவன் உடல் நசுங்கி பலி!

 
விபத்து

பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சென்ற ஆட்டோ ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 வயது சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் திருநெல்வேலியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வெட்டியபந்தி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றி பள்ளிக்கு அனுப்பி வைப்பது வழக்கம். பிள்ளைகள் கேடிசி நகரில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்ததால், ஒரே ஆட்டோவில் அங்குள்ள பிள்ளைகள் ஒன்றாக சேர்நது பள்ளிக்கு சென்று வந்துள்ளனர்.

திருநெல்வேலி

அதன்படி இன்று காலை பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவில் 6 மாணவ, மாணவிகள் சிரித்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது வசவப்பபுரம் - செய்துங்கநல்லூர் சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து பெரும் விபத்தை சந்தித்தது.

இதில் ஆட்டோவில் இருந்த குழந்தைகள் 6 பேரும் அலறி துடித்தனர். ஆட்டோ கவிழ்ந்ததில் அதன் அடியில் 5 வயது சிறுவன் செல்வநவீன் சிக்கிக் கொண்டான். இதில் உடல் நசுங்கிய நிலையில் சிறுவன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காயமடைந்து வலியில் துடித்துக் கொண்டிருந்த 5 குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 5 குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து

உயிரிழந்த சிறுவன் செல்வ நவீன் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிறுவனின் உடலை மீட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 5 வயது எல்கேஜி படிக்கும் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web