பகீர்!! தொடர் கனமழையால் 54 லட்சம் பேர் பாதிப்பு!! 101 பேர் பலி!!
அஸ்ஸாமில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் முக்கிய பகுதிகள் பல மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இதுவரை மழை வெள்ளத்தினால் 32 மாவட்டங்களில் சுமார் 54.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 276 படகுகளின் உதவியுடன் 3,658 பேர் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
12 மாவட்டங்களில் 14,500 பேரை தேசிய பேரிடர் குழுவினர் மீட்டுள்ளனர். கனமழை காரணமாக மேலும் 12 பேர் பலியாகி இருப்பதாகவும் , இதனால் மழை வெள்ளத்தினால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஸ்ஸாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இங்கு இயல்பை விட 272 மிமீ கூடுதல் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் 2,930-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அஸ்ஸாமில் 25 மாவட்டங்களில் குறைந்தது 11 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், புதிதாக உருவாக்கப்பட்ட பஜாலி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும், பிரம்மபுத்திரா மற்றும் கௌரங்கா ஆறுகளின் நீர்மட்டம் பல பகுதிகளில் அபாய அளவை தாண்டி ஓடுகிறது.
அஸ்ஸாமில் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் 43,398 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அசாமில் பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதில் வீடுகள் இடிந்தும், மரம் முறிந்து விழுந்தும் பலத்த பாதிப்பு ஏற்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!