பகீர்!! மருத்துவமனையில் எறும்பு கடித்ததால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு!!

 
எறும்பு

உத்தரபிரதேச மாநிலத்தில் மஹோமா மாவட்டத்தில் இயங்கி வரும் தாய்சேய் நல மருத்துவமனையில் மே  30ம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.. பிரசவத்தின் போது தாய் சீமா அந்த மருத்துவமனையின் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அந்த பிரிவில் சுகாதாரமின்றி காணப்பட்டதாகவும், எறும்புகள் அதிகளவில் இருந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த பிறந்து 3 நாள் ஆன பச்சிளம் குழந்தை திடீரென உயிரிழந்தது. 

குழந்தை

இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், எறும்பு கடித்ததால் தான் குழந்தை பலியானதாக குற்றம்சாட்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பிரசவத்தின் போது சீமாவின் குடும்பத்தாரிடம் லஞ்சம் வாங்கப்பட்டதாகவும் அவர்கள் புகார் கூறினர். குழந்தை திடீரென்று இறந்தது குறித்தும், ஊழியர்கள் லஞ்சம் வாங்கியது குறித்தும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தை

பிறந்து 3 நாள் ஆன குழந்தை சுகாதாரமற்ற சிகிச்சை பிரிவில் தங்கியிருந்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும், லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web