பகீர்!! விமான நிலைய கழிவறையில் பிறந்த குழந்தை பிணம்!!

 
குழந்தை


ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையம் ஐதராபாத்தில் உள்ள ஹம்ஹாத் பகுதியில் அமைந்துள்ளது. தினந்தோறும் இந்த விமான நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று விமான நிலைய பணியாளர்கள் ஓய்வு அறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு கழிவறை அருகே பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை இறந்த நிலையில் கிடந்துள்ளது.

ஐதராபாத் விமான நிலையம்

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் இது குறித்து தகவலை விமான நிலைய போலீசாருக்கு தெரிவித்தனர்.விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஐதராபாத் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த குழந்தையை யார் விமான நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

குழந்தை

அல்லது விமான நிலையத்திற்கு வந்த பிறகு குழந்தை கொல்லப்பட்டு கழவறையில் வீசப்பட்டதா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சர்வதேச விமான நிலையம் பொது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்ற போதிலும், சின்னஞ்சிறு குழந்தை கழிவறையில் வீசி கொல்லப்பட்ட சம்பவம் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web