பகீர் !! மகளை கொலை செய்து , மனைவியை கவலைக்கிடமாக்கி மாயமான தொழிலதிபர்!!

 
தற்கொலை

.மும்பையின்  தொழில் அதிபர்களில் ஒருவர்  ரியான் பிராகோ. இவருக்கு வயது 39. இவருக்கு  பூனம் பிராகோ என்ற மகளும்,  7 வயதில் அனய்கா பிராகோ என்ற மகளும் இருந்தனர்  வியாபாரத்தில்  ரியானுக்கு அடுத்தடுத்த நஷ்டம். இதனை சீராக்க போராடி பார்த்து  பலரிடம் கடன் பெற்று மீண்டும் வியாபாரத்தை தொடங்கினார் தொழிலில் ரியானுக்கு நஷ்டம் ஏற்பட்டதை அறிந்த கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் வேறு யாரிடமாவது கடன்பெற்று அவர்களின் கடன்களை அடைக்கலாம் என்று ரியான் எடுத்த முயற்சியும் பலன் அளிக்காமல் போனது.

தற்கொலை

இறுதியில் வசாய் நகரில் தனக்கு சொந்தமான வீட்டை விற்று கடனை அடைக்கலாம் என்று முயற்சித்தார். ஆனால் கடைசி நேரம் என்பதால் வீடு விற்பதிலும் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ரியான் மன உளைச்சலுக்கு ஆளானார். தனது மனைவி பூனமிடம் கடன் தொல்லைகள் பற்றி கூறி வேதனைப்பட்டுள்ளார்.

இதனால் கடன்காரர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ரியான் குடும்பத்துடன் காஷிமிரா பகுதியில் உள்ள சீசன்ஸ் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி இருக்கிறார். அங்கிருந்தபடியே கடனை திருப்பி அடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். ஆனால் எந்த பலனும் கிடைக்காததால் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தார். இது குறித்து தன் மனைவியிடம் கூறியதால், குழந்தையுடன் சேர்ந்தே தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு இருவரும் வந்தனர்.

விஷம்
இதைத்தொடர்ந்து எலி மருந்து வாங்கி வந்த ரியான் அதனை சாப்பாட்டில் கலந்து 7 வயது மகளுக்கு கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட குழந்தை பரிதாபமாக அவர்கள் கண் முன்பே பலியானது. ஆனால் எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்ட பூனம் உயிரிழக்காததால், ரியான் அவரது கழுத்தை நெரித்ததில் பூனம் மயங்கி விழுந்தார். பூனம் இறந்துவிட்டார் என்று தவறாக நினைத்துக் கொண்ட ரியான் ஓட்டல் அறையில் இருந்து வெளியேறிவிட்டார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த பூனம் கொடுத்த குரலை கேட்ட ஓட்டல் ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த பூனம் தற்போது சகஜ நிலைக்கு திரும்பியுள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஓட்டலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஞாயிற்றுக்கிழமை இரவு குழந்தையை கொன்றுவிட்டு, மனைவியையும் தாக்கிய ரியான், அடுத்த நாளான திங்கட்கிழமை காலை 10 மணியளவில் ஓட்டலை விட்டு சகஜமாக வெளியேறிய காட்சிகள் பதிவானது கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது, அது ஒரு கடையில் விற்கப்பட்டு இருப்பதை அறிந்த போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் தலைமறைவான ரியானை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web