பகீர்!! முதல் நாள் பள்ளி சென்ற மாணவி திடீர் உயிரிழப்பு!! கதறித் துடிக்கும் பெற்றோர்!!

 
சௌமியா

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நேற்று (13ம் தேதி) அனைத்து பள்ளிகளும் தொடங்கின. பள்ளிக்கு வருகை தந்த மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பூக்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்தனர்.கோவை மதுக்கரை மார்க்கெட் சர்ச் காலனியை சேர்ந்தவர் பார்த்திபன்.  இவரது மனைவி சகாயராணி. இந்த தம்பதிக்கு சௌமியா என்ற மகள் இருந்தார். இவர் குனியமுத்தூர் நிர்மலா மாதா மெட்ரிக் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளி விடுமுறை முடிந்த நிலையில்,  நேற்று முதல் நாள் வகுப்புக்கு சௌமியா சென்றிருந்தார். அப்போது காலை 11.30 மணியளவில் வகுப்பறையில் இருந்த சௌமியா திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதை பார்த்து பதறிப்போன ஆசிரியர், சௌமியாவின் பெற்றோருக்கு தகவல் அளித்தார். இதைத்தொடர்ந்து மாணவி சௌமியா பெற்றோர் வரதாமதமாகும் என்று நினைத்த பள்ளி நிர்வாகம் அவரை குனியமுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

சௌமியா
தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்து சௌமியாவின் பெற்றோர், மருத்துவர்களை சந்தித்து அவரின் உடல் நிலை குறித்து விசாரித்தனர். டாக்டர்கள், சௌமியா நலமுடன் இருப்பதாக கூறி இருக்கிறார்கள். சிகிச்சையில் இருந்த சௌமியா சில மணி நேரங்களில் துரதிருஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். இதனால் மருத்துவமனையில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

மாணவி சௌமியா உயிரிழந்த தகவல் கிடைத்த உறவினர்கள் மருத்துவமனை முன்பு குவியத் தொடங்கினார்கள். இது குறித்து அவர்கள் கூறும்போது, ‘‘மருத்துவமனையில் உரிய முறையில் சிகிச்சை அளிக்கவில்லை. சௌமியாவின் உடல்நிலை மோசமாக இருக்கிறது என்று கூறியிருந்தால் நாங்கள் வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருப்போம்’’ என்று குற்றம் சாட்டி தகராறில் ஈடுபட்டனர்.

கோவை

இப்படி பள்ளி சென்ற முதல் நாளே 8ம் வகுப்பு மாணவி சௌமியா பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. மாணவி மர்ம மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.சௌமியாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வந்த பிறகே மாணவியின் மரணம் குறித்த மர்மம் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web