பகீர் !! காதலியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த காதலன் !! அதிர வைக்கும் பிண்ணனி!!

 
சேலம்

சேலம் மாவட்டம், கெங்கவல்லி  கூடமலை ஊராட்சியில் வசித்து வருபவர் முருகேசன். இவர்  விவசாயத் தொழில் செய்து வருகிறார்.  இவர் ஒரு மாற்றுத்திறனாளி . கூடமலையில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் உள்ள சின்னசாமி தோட்டத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார்.  இவருக்கு  ஜெயலட்சுமி. என்ற மனைவியும்,  நந்தினி, ரோஜா என்ற 2 மகள்களும், விஜய் என்ற ஒரு மகனும் உள்ளனர். 

வீடு

ஆத்தூர் அருகே இயங்கி வரும் தனியார் கல்லூரியில் முருகேசனின் 2வது மகளான ரோஜா பிஏ தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கூடமலையில் இருந்து ஆத்தூருக்கு தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் பகுதியில் வசித்து வருபவர்  நீலக்கிருஷ்ணன். இவரது மகன் சாமிதுரை, கூடமலையில் உள்ள தனது பெரியப்பா சின்னதுரையின் வீட்டிற்குச் சென்றிருந்த போது கல்லூரி மாணவி ரோஜாவை பார்த்துள்ளார். அன்று முதல் அவரை ஒருதலையாக சாமிதுரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.


இதனால் சாமிதுரை, மாணவியை பார்க்க அவரது ஊருக்கு சென்று கல்லூரிக்கு செல்லும் வழியில் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் மாணவி ரோஜா பயந்துபோயுள்ளார்.எனவே இது குறித்து ரோஜா தனது குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் கூறியுள்ளார். ஊரில் உள்ள முக்கியமான ஆட்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்தி சாமிதுரையை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சாமிதுரை, ரோஜாவின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்டு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, ‘‘என்னை காதலித்து திருமணம் செய்து கொள் இல்லையென்றால் உன்னை கொன்று விடுவேன்’’ என்று மிரட்டியதாக தெரிகிறது.இதனால் பயந்து போன ரோஜா கூச்சலிட்டுள்ளார். ஆத்திரமடைந்த சாமிதுரை மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை ரோஜா மீது ஊற்றி, அவரை கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து மிதித்துள்ளார். அதுவும் போதாதென்று, தலையில் கல்லை தூக்கிபோட்டு கொடூரமாக தாக்கியுள்ளார். அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாக ஓடிய போது ரோஜாவின்  குடும்பத்தாரையும் சாமிதுரை குடும்பத்தைரையும் கீழே தள்ளி அவர்களையும் தாக்கியுள்ளார். 

சேலம்

ரோஜாவின் நிலையை பார்த்து கதறித் துடித்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கூடமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், ரோஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் குடும்பமே சோகத்தில் மூழ்கிப்போனது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஆத்தூர் டிஎஸ்பி, ராமச்சந்திரன் சம்பவ இடத்திற்கு நேரில் விசாரனை மேற்கொண்டு தப்பியோடிய சாமிதுரையை வலைவீசி தேடி வருகிறார். வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை, ஒருதலையாக காதலித்துக் கொண்டிருந்த சாமிதுரை என்ற இளைஞர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web