”தனியா விட்டுட்டு போயிட்டியே ” மனைவி கதறல்!! திருமணமான 7 நாளில் கணவன் பலி!!

 
south indian marriage

திருப்பத்தூர் மாவட்டம் கதிரிமங்கலம் ஊராட்சி சி.கே.ஆசிரமம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (25). இவர் ஓசூரில் இயங்கி வரும் ஒரு தனியார் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவரது தந்தை சங்கர். கடந்த 13ம் தேதி கார்த்திக்குக்கும் பக்கத்து கிரரமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. மணம் முடித்ததும் கார்த்திக்கும் அவரது மனைவியும் இணைந்து சினிமா, மறுவீடு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு தங்களது உறவினர்களின் வீடுகளுக்கு செல்வதுமாக இருந்து வந்தனர். சில நாட்களுக்கு முன்னர் கார்த்திக் தனது  தனது மாமியார் வீட்டுக்கு சென்று விட்டு  சி.கே.ஆசிரமம் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு மனைவியுடன் திரும்பினார்.

திருமணம்

காலை எழுந்தவுடன் வெளியே வந்த கார்த்திக், வெளிப்பக்க மின்விளக்கு எரிந்து கொண்டிருந்ததை பார்த்தார். அதனை அணைப்பதற்காக சுவிட்ச்சில் கைவைத்தபோது, எதிர்பாராத விதமாக  மின்கசிவு ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், கார்த்திக் தூக்கிவீசப்பட்டார்.இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், கார்த்திக்கை தூக்கிக் கொண்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கார்த்திக்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்  துக்கம் தாங்க முடியாமல், கதறி அழுதனர்.

death

இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்தனர். கார்த்திக் மரணம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.திருமணமான 7 நாளில் புதுமாப்பிள்ளை மின்சாரம் பாய்ந்து  பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், கார்த்திக்கின் மனைவி மற்றும் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web