போதையில் பயங்கரம்... டிப்பர் லாரி வாகனங்களை அடுத்தடுத்து மோதியதில் 10 பேர் பலி, 50 பேர் காயம்!

 
ஜெய்ப்பூர் ஜெய்ப்பூர்
 

 

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் டிப்பர் லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்களை மோதியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர், 50 பேர் காயமடைந்தனர். இந்த துயரச் சம்பவம் லோஹமண்டி சாலையில் நடந்தது. வேகமாக வந்த லாரி, எதிர்திசையில் வந்த கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதாகவும், பலமுறை மோதிய பிறகும் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

பெரும் சத்தத்துடன் தொடர்ச்சியாக நடந்த மோதல்களால் பல வாகனங்கள் சேதமடைந்தன. இறுதியாக லாரி நின்றதும், மீட்புக் குழுவினரும் போலீசாரும் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இறந்தவர்களின் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, அவர் மது அருந்தியிருந்தாரா என்பதற்கான மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இதே மாநிலத்தின் பலோடியில், பக்தர்களை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர், நிறுத்தப்பட்ட டிரெய்லர் லாரி மீது மோதியதில் 15 பேர் உயிரிழந்ததும், 2 பேர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஜோத்பூரைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள முதல்வர் பஜன்லால் சர்மா, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகளையும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!