கோவில் உண்டியலில் ரூ100கோடி காணிக்கை!!

 
100கோடி செக்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது.  இந்த கோவிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.  வழக்கம் போல்  நேற்று கோவில் அதிகாரிகள் உண்டியல் காணிக்கையை எண்ணத் தொடங்கினர்.  அப்போது  உண்டியலில் பக்தர் ஒருவர் ஒரு காசோலையை காணிக்கையாக போட்டு இருந்தார். அந்த காசோலையில் "100 கோடி ரூபாய்" எழுதப்பட்டு இருந்தது. இதைபார்த்து  அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.  

நரசிம்மர்

பலநூறு ஆண்டுகளாக கோவில் வரலாற்றில் நடக்காத இந்த செயலால்  உயர் அதிகாரிகள்  விசாரிக்க தொடங்கினர்.  அந்த காசோலையில் உள்ள தகவல்களின் படி  பொட்டேபள்ளி ராதாகிருஷ்ணாவின் சேமிப்பு கணக்கு காசோலை என்பது என தெரியவந்தது. காசோலை எம்விபி டபுள் ரோடு கிளையின் பெயரில் இருந்தது.   அதிலும் வராஹ லக்ஷ்மி நரசிம்ம தேவஸ்தானம் என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலையில் முதலில் ரூ10  என்றும், பிறகு அதை அடித்து 100 கோடி எனவும் எழுதப்பட்டிருந்தது.

நரசிம்மர்

 இதனால் அதிகாரிகள்  அனைவருக்கும் ஆர்வமும், சந்தேகமும் ஏற்பட்டது.  உடனடியாக அதிகாரிகள் வங்கிக்கு சென்று பொட்டேபள்ளி ராதாகிருஷ்ணாவின் சேமிப்பு கணக்கு குறித்த தகவல்களை கூறினர். அப்போது அவரது கணக்கில் ரூ.17 மட்டும் இருப்பு இருந்தது .   காசோலையை  காணிக்கையாக போட்டவரின்  தகவல்களை  அறிய, இன்று காசோலையை வங்கிக்கு அனுப்பினர். காசோலையை போட்டவர் குறித்த  முழுமையான விவரங்களை எடுக்க கோயில் தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில்   விவரங்களைக் கண்டறிந்து, அவரைத் தொடர்பு கொண்டு, மீண்டும் இதுபோன்ற செயலில் ஈடுபடாமல் தடுக்க கோவில் நிர்வாகிகள் திட்டமிட்டு வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web