11 நாட்கள் அரையாண்டு விடுமுறை... பள்ளிக்கல்வித்துறை அதிரடி...!!

தமிழகம் முழுவதும் நடப்பு கல்வியாண்டு முதல் ஒரே தேர்வு முறை மற்றும் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் பண்டிகைகள் திருவிழாக்கள் தவிர்த்து இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒரே தேர்வு வினாத்தாளும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் தான் காலாண்டு தேர்வு நடைபெற்றது. அதே போல் தற்போது அரையாண்டு தேர்வு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் படி தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் ஒரே வினாத்தாள் மாதிரியுடன் ஒரே தினத்தில் நடைபெற உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல் தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில் 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் அரையாண்டு தேர்வு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் 6 முதல் 12 ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை.அதன்படி 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7ம் தேதி முதல் 22 ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளது. இதேபோல 6 முதல் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ம் தேதி முதல் 21 ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டிசம்பர் 23 ம் தேதி முதல் ஜனவரி 1 ம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில் ஜனவரி 2 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆசிரியர்கள் உடனடியாக பாடங்களை விரைந்து முடிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!