பைக்கில் சென்ற 10ம் வகுப்பு மாணவன் லாரி மோதி பலி!!! தொடரும் சோகம்!!

 
விபத்து

இருசக்கர வாகனத்தில் சென்ற 10ம் வகுப்பு மாணவன் லாரி மோதி விபத்தில் பலியான சம்பவம் ஸ்ரீபெரும்புதூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் வசித்து வருபவர் ஜெகன். ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவரது மகன் பிரேம்குமார். 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

காஞ்சிபுரம்

பிரேம்குமார் நேற்று தனது நண்பரை சந்திக்க வளர்புரத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அரக்கோணம்-& சென்னை நெடுஞ்சாலையில் அவர் இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்த போது, சென்னை நோக்கி லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. திடீரென்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பிரேம்குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது லாரி பலமாக மோதியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கி மாணவன் பிரேம்குமார் சம்பவம் இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் கிடைத்து விரைந்து வந்த போலீசார், மாணவன் பிரேம்குமாரின் உடலை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம் லாரி டிரைவர் விரைவில் பிடிபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விபத்தில் சிக்கி 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவத்தால் பிரேம்குமாரின் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web