தூக்கில் தொங்கிய 10ம் வகுப்பு மாணவி! போலீஸ் விசாரணை!!

 
தற்கொலை

சிபிஎஸ்சி 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கொரட்டூர் திருமலை நகர் பகுதியில் வசித்து வருபவர் அருள்குமார். இவரது மனைவி திலகவதி. இந்த தம்பதிக்கு 17 வயதில் சவேதா என்ற மகளும், 15 வயதில் சவித்ரா என்ற 2 மகள்களும், ஜஸ்வந்தன் (14) என்ற மகனும் உள்ளனர். 

தற்கொலை

இவர்களில் இளைய மகள் சவித்ரா, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தார். சில நாட்களாகவே மாணவி சவித்ரா தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்து இருப்போமோ என்ற சந்தேகத்திலும், கவலையிலும் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் மாணவி மன உளைச்சலில் காணப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் மாணவி சவித்ரா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த குடும்பத்தினர் அழுது துடித்தனர். இவர்களின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கொரட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

தற்கொலை

மாணவி சவித்ராவின் வீட்டிற்கு விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். 15 வயதான 10ம் வகுப்பு மாணவி தேர்வு தோல்வி பயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web