குண்டுவெடிப்பில் 11 பேர் பலி!! 53 பேர் படுகாயம்!! மாலியில் பயங்கரம்!!
தீவிரவாதிகளின் அச்சுறுத்தலும் தாக்குதலும் கடந்த சில மாதங்களாகவே சர்வதேச அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே போல் ஒரு கோர சம்பவம் பமாக்கோ நாட்டில் நிகழ்த்தப்பட்டுள்ளது. மோப்டியில் பண்டியாகரா மற்றும் கவுண்டகா இடையேயான சாலையில் இன்று அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு ஏற்பட்டது.
இதில் குறிப்பாக மாலியில் பொதுமக்கள் பயணித்த பேருந்தில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 53 பேர் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில் தீவிரவாதிகளின் பங்களிப்பு இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலியை பொறுத்தவரை நீண்ட காலமாகவே வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். அப்பகுதியில் மட்டும் வன்முறையால் இதுவரை 1000 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!