11ம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை!! தொடரும் சோகம்!!

 
திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் அடுத்த பேரம்பாக்கத்தில் வசித்து வருபவர் ஜானகி ராமன். இவர்  அதே பகுதியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஜானகிராமன். இவருக்கு வயது 17. இவர் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கொட்டையூர் காலனி பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தார். இவரது தந்தை  பரந்தாமன். 

hanging suicide

பிளஸ்1 தேர்வு எழுதிய ஜானகிராமன் அதன் முடிவுக்காக காத்திருந்தார். இந்நிலையில் வருகிற 27ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. மாணவன் ஜானகிராமன், தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தேர்வு முடிவுகள் குறித்து மன உளைச்சலில் இருந்துள்ளார்.இந்நிலையில் மாணவன் தன் வீட்டின் அருகே  உள்ள குளக்கரைக்கு சென்று அங்கு இருக்கும் புளியமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

dead body

ஜானகிராமன் மரத்தில் சடலமாக தொங்குவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். உயிரிழந்த ஜானகிராமனின் பெற்றோர் அழுது துடித்தனர். பின்னர் மப்பேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.நாளை மறு தினம் வெளியாக உள்ள பிளஸ்1 தேர்வு முடிவுகளில் தான் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் இருந்த பிளஸ்1 மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web