மகளிர் உதவித் தொகை திட்டத்தில் 12431 ஆண் பயனாளிகள் நிதியுதவி... சர்ச்சை!

 
maharastra

மராட்டிய மாநிலத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் 'லாட்கி பகின்' (அன்பு சகோதரி) திட்டத்தில் ஆண் பயனாளிகள் நிதியுதவி பெற்றுள்ள நிகழ்வு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவல் ஆர்.டி.ஐ. மூலம் கேள்வி எழுப்பிய பின்னர், மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறையால் வழங்கப்பட்ட பதிலில் வெளிப்பட்டுள்ளது.

பதிவுகளின் படி, இந்த திட்டத்தில் 12,431 ஆண் பயனாளிகள் தவறுதலாக நிதியுதவி பெற்றுள்ளனர். மேலும், 77,980 பெண்களுக்கு திட்டத்தில் தவறாக ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்பட்டதையும் ஆர்.டி.ஐ. தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த திட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் பயனாளிகள் தேர்வு பணி அவசர கோலத்தில் செய்யப்பட்டதால் தகுதியற்ற பலர் திட்டத்தில் சேர்ந்ததாகவும் தெரியவந்துள்ளது. அரசு வேலை செய்பவர்களும் சிலர் திட்டத்தில் சேர்ந்து இருந்ததால், அவர்களின் பெயர்களை நீக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!