+2 மறுகூட்டல் முடிவுகள் வெளியீடு!! பார்க்கும் முறை!!

தமிழகத்தில் மார்ச் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 7.5 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். மேலும் 47,934 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவ மாணவிகளுக்கு சமீபத்தில் துணைத் தேர்வு நடத்தப்பட்டது.
இத்துணைத் தேர்வுகளை 30000 மாணவர்கள் எழுதியுள்ளனர். இதற்கான முடிவுகள் வெளிவந்த நிலையில், மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் சமீபத்தில் ஆன்லைனில் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில், 11 மற்றும் 12-ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகிறது.
அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.inல் தங்களது பதிவெண், பிறந்த தேதி தகவல்களை பதிவு செய்து திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பட்டியலில், இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாளில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!