பெரும் சோகம்... எந்நேரமும் ரீல்ஸ்... தாய் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை!

 
செல்போன்

 
 
சென்னை மதுரவாயல்  இந்திராகாந்தி தெருவில் வசித்து வருபவர் 17 வயது  ஸ்ருதிலயா . இவர் விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.   இவரது தாய் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் தம்பியுடன் மாணவி ஸ்ருதிலயா வீட்டில்   படித்துக்கொண்டிருந்தார்.  இரவு மாணவியின் தாய் வேலை முடித்து வீட்டிற்கு வந்தார்.

தற்கொலை

 வந்தது முதல் மாணவி வெளியே வரவே இல்லை. மாணவியின் அறை நீண்ட நேரமாக சாத்தியிருந்துள்ளது.  சந்தேகமடைந்த தாய், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.  அப்போது மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அலறி கூச்சலிட்ட சத்தம் கேட்டு  அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற  போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைவிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ்

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட விசாரணையில்  தற்போது மாநிலம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாணவி படிக்காமல், செல்போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இதனைப் பார்த்த  தாய் மகளை  கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி, தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்” என தகவல்கள் வெளியாகியுள்ளன.   இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web