13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை!!

 
rain

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை அக்டோபர் 13 வரை நீடிக்கும் என   சென்னை வானிலை ஆய்வு மையம்  அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  தமிழகத்தில்  மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று அக்டோபர் 8 ஞாயிற்றுக்கிழமை  மற்றும் நாளை  திங்கட்கிழமை   தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

மழை


 அதன்படி கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அக்டோபர் 10, 11ம் தேதிகளில் தமிழகம்,   புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும்.

வெயில் , மழை

கோவை , நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் அக்டோபர் 12, 13 ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன்  கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web