கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் பலி!! 80 பேர் கவலைக்கிடம்!!
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் உள்ள அன்டனானரிவோவில் இந்திய பெருங்கடல் தீவு போட்டிகள் செப்டம்பர் 3-ம் தேதி தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு அந்நாட்டின் பரியா என்ற தேசிய மைதானத்தில் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தின் நுழைவாயிலில் குவிந்திருந்தனர். திடீரென ரசிகர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் மைதானத்துக்குள் நுழைய முயன்றதால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது.
〰️ 🏟 🔗🚨 EMERGENCY #Madagascar's national stadium for the opening ceremony of the Indian Ocean Island Games has killed 12 & injured around 80, the PM said #Islandgame https://t.co/wxmHe4zQK3 pic.twitter.com/swgi2ktMx1
— A Deniz Ekşioğlu (@_AD_CHANEL6) August 25, 2023
மைதானத்தின் காவலாளிகளால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 7 பேர் குழந்தைகள். மேலும் 80 பேர் கவலைக்கிடமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களின் 11 பேர் உயிருக்குப் போராடி வருகின்றனர். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதனை அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டியன் சே உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மடகாஸ்கர் நாட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா தொலைக்காட்சியில் உரையாற்றும் போது, ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். 2019-ம் ஆண்டு மடகாஸ்கரின் மகாமசினா மைதானத்தில் இதேபோன்ற நெரிசலில் 15 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!