கோல்ட்ரிஃப் இருமல் குடித்ததால் 14 குழந்தைகள் பலி... மேலும் 2 இருமல் மருந்துகளுக்குத் தடை!

உடனடியாக தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிஃப்' இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த மருந்தைத் தயாரித்த தமிழ்நாட்டில் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த நிறுவனமும் மூடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மற்ற இருமல் மருந்துகளும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 2 இருமல் மருந்துகளில் டைஎத்திலீன் கிளைகால் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

'ரீ லைஃப் மற்றும் 'ரெஸ்பிஃபிரெஷ் ' இரு மருந்துகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் டைஎத்திலீன் கிளைகால் இருப்பது தர பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த இரு மருந்துகளுக்கும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் தடை விதிக்கப்படுவதாக மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. டைஎத்திலீன் கிளைகால் 0.1% மட்டுமே இருக்கவேண்டிய சூழலில் டைஎத்திலீன் கிளைகால் 0.616%, ரெஸ்பிஃபிரெஷ் 1.342% இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உணவுத் துறை பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
