அதிர்ச்சி வீடியோ... படகில் சென்ற 14 பள்ளி மாணவர்கள் பலி... சுற்றுலா சென்ற போது சோகம்... !
குஜராத் மாநிலம் வதோதராவில் சன்ரைஸ் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்து வரும் 23 மாணவர்கள் மற்றும் 4 ஆசிரியர்கள் வதோதராவில் உள்ள ஹர்ணி குளத்திற்கு சுற்றுலா சென்றிருந்தனர். இந்த குளத்தில் வதோதரா மாநகராட்சி மற்றும் கோட்டியா என்ற நிறுவனம் சார்பில் படகு போக்குவரத்து செயல்பட்டு வந்தது. அங்குள்ள படகில் 15 பேர் மட்டுமே பயணிக்கலாம் என்ற நிலையில், 27 பேரும் ஒரே படகில் ஏறினர். குளத்தின் நடுவே படகு சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. ஏரியில் விழுந்த மாணவர்கள் அலறி கூச்சலிட்டனர்.
Saddest news on internet rn 💔😭😭
— Abdul 🇮🇳 (@RolexbhaisirSir) January 18, 2024
13 students drowned in #HarniLaki in#Vadodara Gujarat due to #BoatAccident 😔😭#GujaratNews #VadodaraAccidentpic.twitter.com/8FvnkRIqEg
அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். நீச்சல் தெரிந்த சிலர், உடனடியாக தண்ணீருக்குள் குதித்து தண்ணீரில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதற்குள் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை 23 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதில் 14 மாணவர்கள் உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 12 பேர், 13 முதல் 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் மேலும் 4 சிறுவர்கள் மாயமாகியுள்ள நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள குஜராத் மாநில முதல்வர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ50000 நிதி உதவியும், மாநில அரசு உதவிகளும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் “மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தை அறிந்து இதயம் நொறுங்கியது. மறைந்த மாணவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் இந்த துக்ககரமான சூழலில் அவர்களுக்கு மன தைரியத்தை வழங்கட்டும்” என பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க