நாளை மறுநாள் முதல் 144 தடை உத்தரவு !! கலெக்டர் அதிரடி!!

 
144 தடை

செப்டம்பர 11ம் தேதி தியாகி  இமானுவேல் சேகரன் நினைவுநாள்  தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட உள்ளது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக செப்டம்பர் 9ம் தேதி நாளை மறுநாள் சனிக்கிழமை முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இமானுவேல் சேகரன்

அதே போல் அக்டோபர் 30ம் தேதி தேவர் குருபூஜை அனுசரிக்கப்பட உள்ளது.இதற்காக அக்டோபர் 25 முதல் அக்டோபர் 31 வரை  தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சியும், அக்டோபர் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை பசும்பொன் கிராமத்தில் தேவர் குருபூஜை நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம். இந்த இரு நிகழ்ச்சிகளிலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர்  கலந்து கொள்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும்,  பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை  மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.இந்த நாட்களில் வாடகை வாகனங்கள் அனுமதியின்றி மாவட்டத்திற்குள் நுழைய தடை. அத்துடன்  நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் ஒரு கிலோ மீட்டருக்கு முன்பு வரை மட்டுமே   ஊர்வலமாக வரவும், ஜோதி எடுத்தல் போன்ற நிகழ்வுகளும் அனுமதிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web