15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

 
school rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்காததால் விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.காவிரி நீரும் வந்து சேராமல் பயிர்கள் வாடத்தொடங்கியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகத்தில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  

மழை

குறிப்பாக கோவை , நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளது.

வெயில் , மழை
நாளை அக்டோபர் 12ம் தேதி முதல் அக்டோபர் 16ம் தேதி வரை  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 சென்னை யை பொறுத்தவரை பகலில் வெயில் கொளுத்தினாலும் மாலையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு  ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான சாரல் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web