15 பேர் பலி!! 50 பேர் கவலைக்கிடம்!! 40 பேர் மாயம்!! அமர்நாத் மேகவெடிப்பில் தொடரும் சோகம்!!

 
மேக வெடிப்பு

அமர்நாத் மேக வெடிப்பு! 15 பக்தர்கள் பலி! 40 பேர் மாயம்!

அமர்நாத் குகை அருகே ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட மழைவெள்ளத்தில் சிக்கி பலியான பக்தர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக அதிகரித்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக்கு செல்வதற்கான யாத்திரைக்கு தடை விதித்து இருந்தது. இதைத்தொடர்ந்து நடப்பு ஆண்டில் கடந்த மாதம் 30ம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அமர்நாத் யாத்திரையை பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தொடங்கினார்கள்.


கடந்த சில நாட்களாக அமர்நாத் பகுதியில் கனமழை கொட்டி வருகிறது. இருப்பினும் குகைக்கு செல்ல பக்தர்கள் மலை ஏறிக் கொண்டு இருந்தனர்.இந்நிலையில், நேற்று அமர்நாத் திடீரென்று மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் அமர்நாத் குகைக்கு மலை ஏறிக் கொண்டிருந்த பக்தர்கள் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இதில் 5 பேர் பலியாகி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேக வெடிப்பு
மழைப்பொழிவு காரணமாகவும், மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாலும் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 40 பேர் மாயமாகி உள்ளதாகவும், 50 பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “பாபா அமர்நாத் குகைக்கு அருகே மேக வெடிப்பினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய பக்தர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கைகளில் NDRF,CRPF,BSF மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மக்களின் உயிரைக் காப்பதே எங்களின் முதல் கடமை. மேலும், காயமடைந்த பக்தர்கள் அனைவரும் குணமடைய வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.அமர்நாத் குகைக் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web