பாஜக தலைவர் கொலை வழக்கு... 15 பேருக்கு தூக்கு தண்டனை....!

 
ரஞ்சித்


கேரளா மாநிலம் ஆழப்புழாவில் வசித்து வந்தவர் வழக்கறிஞர்   ரஞ்சித் சீனிவாசன். இவர்  பாஜக அணியில்  செயல்பட்டு வந்தார்.  சீனிவாசன்   2021 டிசம்பர் 19ம் தேதி   அவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவரை கொடூரமாக கொலை செய்தனர். வீட்டில் அவரது குடும்ப உறுப்பினர்கள் கண்முன்னே இந்த கொடூர கொலை என்பது நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.   எஸ்டிபிஐவை சேர்ந்த கேஎஸ் ஷான்  கொலை செய்யப்பட்ட அடுத்த சில மணிநேரங்களில்  ரஞ்சித் சீனிவாசன் கொலையும் நடந்தது. இரு கொலைகளுக்கும், தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  

ரஞ்சித் சீனிவாசன்

விசாரணைக்கு பின்  நிஜாம், அஜ்மல், அனூப், எம்டி அஸ்லாம், சலாம், அப்துல் கலாம், சஃபாருதீன், முன்ஷாத், ஜசீப், நவாஸ், ஷெமீர், நசீர், ஜாகீர் உசேன், ஷாஜி மற்றும் ஷாம்னாஸ் ஆகியோர்  கைது செய்யப்பட்டனர். எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.  இந்த வழக்கு ஆழப்புழா மாவட்டம் மாவெலிகாராவில் உள்ள கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு  வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணையும் தற்போது  முடிவடைந்த நிலையில் நீதிமன்றம் இன்று  பரபரப்பு தீர்ப்பை அறிவித்துள்ளது. அதன்படி  குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கைதான 15 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது.   இந்தியாவை பொறுத்தமட்டில் தூக்கு தண்டனை என்பது  சில வழக்குகளில் மட்டுமே பரிந்துரை செய்யப்படும்.  ஆனால் ஒரே வழக்கில் 15 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

இதற்கு முன்  இந்திய வரலாற்றில்  அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில்  மொத்தம் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு அடுத்த பெரிய வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.  அதே போல்  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி  கொலை வழக்கில் 26 தமிழர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.  இதனையடுத்து இப்போது தான் ஒரே நேரத்தில் 15 குற்றவாளிகளுக்கு   தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம்  3வது பெரிய மரண தண்டனை வழக்காக பார்க்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web