இன்று 16 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்!

 
school rain

தமிழகத்தில் இன்று (அக்.14) 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை அடுத்த இரு தினங்களில் முழுமையாக விலகிய பின்னர், வடகிழக்குப் பருவமழை அக்.16-ஆம் தேதி தொடங்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கன மழை

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை தீவிரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மழை

மேலும், மீனவர்கள் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?