பேருந்து விபத்தில் 10 பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் பலி!! பலர் படுகாயம்!! பிரதமர் இரங்கல்!!

 
பேருந்து

 

இமாச்சல பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் உள்ள ஷைன்ஷார், சைஞ்ச் என்ற இடத்தில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜங்லா கிராமத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள சாலைக்கு கீழே உள்ள பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

மோடி ட்வீட்

இந்த விபத்தில் மாணவர்கள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுற்றுவட்டார மக்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

மோடி

இந்த விபத்தில் படுகாயமடைந்த பலர் கவலைகிடமான நிலையில் உள்ளதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.இந்த விபத்து குறித்து துணை ஆணையர் குலு அசுதோஷ் கர்க் கூறுகையில், பேருந்தில் சிக்கி உள்ள உடல்கள் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று காலை 8.45 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. பேருந்து ஷன்ஷரில் இருந்து அவுத் நோக்கி சென்று கொண்டிருந்தத போது ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web