17 ஆசிரியர்கள் மயக்கம்... இடைநிலை ஆசிரியர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பரபரப்பு!!

 
ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் 4 ஆசிரியர் சங்கங்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
தமிழகத்தில் ஆசிரியர்கள் சங்கம்  'சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி  இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

இந்த போராட்டத்தில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்  , பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர், டெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கம்  4 சங்கத்தினரும் ஒன்று கூடி  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில்  நேற்று இரவில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் ஆசிரியர்கள் போராட்டம் தொடர்ந்தது.   

ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

இதனால் அடுத்தடுத்து 17 ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டக்களத்தில் மயக்கம் அடைந்தனர். இவர்கள் 17 பேரும்  மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோரிக்கையை நிறைவேற்றும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web