நெடுஞ்சாலையில் கோர விபத்து... 17 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்... 16 பேர் பலி... 6 பேர் கவலைக்கிடம்... !!

 
வெனிசுலா

வெனிசுலாவின் தலைநகர் கராகசில் கோர விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெனிசுலாவை தலைநகருடன் இணைக்கும்  கிரான் மாரிஸ்கர்டி அயாசுசோ நெடுஞ்சாலையில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது.நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால்  வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிக் கொண்டன.  

வெனிசூலா

சுமார் 17 வாகனங்கள் அடுத்தடுத்து  மோதியதில் அந்த வாகனங்கள் பலத்த சேதமடைந்தன. இதனால் அவை  தீப்பிடித்து எரிந்தன. ஒரு பேருந்து முற்றிலும் கருகிவிட்டது.இந்த கோர விபத்து குறித்து  தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர்  தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

வெனிசூலா

இந்த கோர விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். பலர்  படுகாயம் அடைந்தனர். அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்தில் சிக்கிய வாகனங்கள் கொழுந்து விட்டு  எரியும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web