17 வயசுல செக்ஸ் டார்ச்சர்! குடும்ப நண்பரால ரெண்டரை வருஷம் பாலியல் தொல்லை! அதிர வைத்த பிரபல நடிகை!

 
குப்ரா சைட்

மீ டூ இயக்கம் எத்தனை தான் ஆர்வமாக செயல்பட்டு வந்தாலும், நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை.  சில பெண்கள், மீ டூ இயக்கத்திற்கு பின்னர், கொஞ்சம் வெளிப்படையாக, தைரியமாக தங்களுக்கு நேர்ந்த பாலியல் குற்றங்களைச் சொல்ல இப்போது முன் வந்திருக்கிறார்கள். இன்னும் வெகு சிலர் இந்த அநீதிக்கு எதிராக போராடவும், புகார் தெரிவிக்கவும் முன் வருகிறார்கள்.

அதிர்ச்சியளிக்கும் விதமாக தமிழகத்தில் பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இப்படி பாலியல் தொல்லைகள், கற்பழிப்புகள், நிர்வாண வீடியோக்கள் எடுத்து மிரட்டுவது என ஆசிரியர்களே ஈடுபட்டிருப்பது இந்த சமூகத்தில் ஆண்களின் வக்ரபுத்தி எந்தளவுக்கு புரையோடி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. பிரபலமான நடிகை ஒருவர், தனது 17 வயதில் இருந்து இரண்டரை ஆண்டு காலங்களாக குடும்ப நண்பர் ஒருவரால் தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு ஆளானதாகவும், இதனால் தனது கன்னித்தன்மையை இழந்ததாகவும் அதிர்ச்சியூட்டும் தகவலை கூறியுள்ளார்.

குப்ரா சைட்

பிரபல நடிகையும் எழுத்தாளருமான குப்ரா சைட்  இப்படி பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குப்ரா சைட் பிரபல நடிகையாகவும், மாடலாகவும் பரபரப்பாக இயங்கி வருகிறார். நெட்பிக்சில் ஒளிபரப்பான சேக்ரட் கேம்சில் இவரது நடிப்பு பட்டிதொட்டி எங்கும் பரபரப்பாக பேசப்பட்டது. நடிகை, மாடல் என்ற பன்முக திறமை கொண்ட குப்ரா சைட், தற்போது ஓபன் புக் நாட் டூ மெமோயர் என்ற புத்தகத்தின் மூலம் தனது எழுத்து திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த புத்தகத்தில் தான் தன் வாழ்க்கையில் நடந்த பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை நடிகை குப்ரா சைட் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறும் போது, ‘‘எனது குடும்பத்தின் நம்பிக்கைக்குரியவராகவும், நண்பராகவும் இருந்து வந்த அந்த நபர் எனது 17 வயதில் பெரும் கொடுமையை செய்தான். என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதுடன், எங்கள் குடும்பத்தின் பண நெருக்கடியில் இருந்து காப்பாற்றி அவரை நல்லவர் போல காட்டிக் கொள்ள நடித்தான்.

குப்ரா சைட்

என் குடும்பத்திற்கு பல உதவிகளை செய்வதால் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு சாதாரணமாக வர ஆரம்பித்தான். வீட்டில் இருக்கும் போது என் அம்மாவுக்கு முன் என்னை ‘குட்டி’ என்று செல்லமாக அழைத்து விட்டு, தனிமையில் எனக்கு முத்தம் கொடுத்து அத்துமீறி நடந்து கொள்வான். இப்படி நான் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் தொல்லைகளை அனுபவிக்க நேர்ந்தது. இதனால் நான் என் கன்னித்தன்மையை இழந்தேன் என்று நடிகை எழுதியுள்ளார்.

இதனால் கொதித்தெழுந்த நான் ஒரு கட்டத்தில் இதுபற்றி குடும்பத்தாரிடம் கூற நினைத்த போது, என்னை மிரட்டிய அந்த நபர், இதுபற்றி வெளியில் கூறினால் உன்னையும் உன் குடும்பத்தையும் அழித்து விடுவேன் என்று மிரட்டலில் ஈடுபட்டான். இதனால் மனவேதனையில் தவித்த என்னை புரிந்து கொண்ட என் அம்மா, அந்த நபரை தவிர்க்க ஆரம்பித்தார். நாளடைவில் அவரது போனை கூட தவிர்த்தார். அப்போதுதான் வாழ்க்கை எவ்வளவு விசித்திரங்களைக் கொண்டது என்பதை என்னால் உணர முடிந்தது.

குப்ரா சைட்

சில வருடங்கள் கழித்து, என் தாயிடம் எனக்கு நேர்ந்த கொடூரங்கள் குறித்து சொல்லி அழுது புலம்பினேன். இதைக் கேட்டதும் என் தாய் அதிர்ச்சியடைந்து மனமுடைந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்று நடிகை குப்ரா சைட் தான் எழுதி புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

ஒரு நடிகை தனக்கு சிறு வயதில் நேர்ந்த பாலியல் கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகைக்கு பல மகளிர் அமைப்புகளும் ஆதரவுகரம் நீட்டத் தொடங்கியுள்ளனர். ஆனால் இதுவரை அந்த நபர் யார் என்பதை நடிகை குப்ரா சைட் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிறு வயது முதல் அவர் குடும்பத்தாருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் என்பது குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வருவது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web