177 விமானங்கள் ரத்து... மீண்டும் தொடங்கிய விமான சேவை...!!
தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் தலைநகர் சென்னையை புரட்டிப்போட்டது. தொடர்ந்து 12 மணி நேரத்துக்கும் மேலாக சென்னையில் கனமழை கொட்டி தீர்த்தது. சென்னையின் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக மாறின. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களும் மிதக்க தொடங்கிவிட்டன.
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் பாதிக்கப்பட்டன. சாலைகள் போக்குவரத்து செல்ல முடியாமல் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்திருந்தது. இதேபோல் சென்னை விமான நிலையத்திலும் மழைநீர் சூழ்ந்தது. இந்நிலையில், இதனால் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
தற்போது படிப்படியாக சீராகி வரும் நிலையில் இதன் காரணமாக இன்று காலை 9 மணி வரை விமான சேவை மீண்டும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. விமான ஓடுதளத்தில் தேங்கிய மழைநீர் வடிந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் மிக குறைந்த அளவு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இன்றும் 177 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!