அதிர்ச்சி! பிரபல மாடல் அழகி தற்கொலை! 14 நாட்களில் அடுத்தடுத்து 4 அழகிகள் தற்கொலை!

 
சரஸ்வதி தாஸ்

அடுத்தடுத்து இளம்பெண்கள் தற்கொலை மேற்கு வங்கத்தை அதிர செய்துள்ளது. இந்த கொரோனா ஊரடங்கு பலருக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். ஆனாலும், அதிகளவிலான இளம்பெண்களின் தற்கொலை முடிவுகளுக்கு சரியான காரணங்கள் இன்னும் தெரியவரவில்லை. கடந்த 14 நாட்களில் மட்டும் மேற்கு வங்க மாநிலத்தில், குறிப்பாக மாடலிங் துறையில் இதுவரை 4 இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சந்தேக மரணம் என அவற்றை போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று கொல்கத்தாவைச் சேர்ந்த 18 வயதேயான இளம்பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாலத்தில் உள்ள கொல்கத்தாவில் இருக்கும் கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி தாஸ். இவருக்கு வயது 18. இவர் பிரபல மாடலாக பிரகாசித்து வந்தார். மேலும் பள்ளி குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்கும் பணியையும் மேற்கொண்டு வந்திருந்தார்.

சரஸ்வதி தாஸ்

இவரின் தாய் கையில் சரஸ்வதி தாஸ் ஒரு வயது குழந்தையாக இருக்கும் போதே அவரது கணவர் இருவரையும் விட்டு விட்டு சென்று விட்டார். இதனால் தாய் மாமாவின் பராமரிப்பில் சரஸ்வதி தாசும் அவரது தாயும் வசித்து வந்தனர். சரஸ்வதி தாசை அவரது பாட்டி செல்லமாக வளர்த்து வந்தார் என்று கூறப்படுகிறது. சரஸ்வதி தாஸ் எப்போதும் பாட்டியுடன் உறங்குவது வழக்கம். 

இந்நிலையில் இரவு 2 மணியளவில் சரஸ்வதியை காணவில்லை என்று அவரது பாட்டி வீடு முழுக்க தேடி இருக்கிறார். அப்போது படுக்கை அறைக்கு பக்கத்தில் இருந்த அறையில் சரஸ்வதி தாஸ் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அழுது கூச்சலிட்டார்.

இவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர், உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தங்களது விசாரணையை தொடர்ந்த போலீசார், சரஸ்வதி தாஸ் மரணத்திற்கு முன்பு வீட்டில் ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளாரா என்பது குறித்து ஆய்வு செய்தனர். ஆனால் எப்படி எந்த கடிதமும் கிடைக்கவில்லை.

சரஸ்வதி தாஸ்

போலீசின் முதல் கட்ட  விசாரணையில், சரஸ்வதி தாஸ் ஒரு இளைஞரை காதலித்ததாக தெரிகிறது. தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு மணி நேரம் முன்பு வரை அதாவது நள்ளிரவு 1 மணிவரை அந்த இளைஞருடன் சரஸ்வதி தாஸ் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் கடந்த 14 நாட்களில் இது 4வது தற்கொலை என்பது வேதனை அளிக்கும் விஷயமாக உள்ளது. நடிகை பல்லவி டே, மாடல் நடிகை விதிஷா, மஜும்ஷா உள்ளிட்டோர் இதற்கு முன்னர் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டனர். சரஸ்வதி தாஸ் தற்கொலையைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web