+2 மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு சாலையோரம் வீசப்பட்ட அவலம்!!

 
மாணவி


பள்ளிக்கு சென்ற 12ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சாலையோரம் வீசப்பட்ட  கொடூர சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்தேறியுள்ளது. இதனால் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.கடந்த புதன்கிழமை 12ம் வகுப்பு மாணவியை அவரது தந்தை வழக்கம் போல் பள்ளியில் விட்டு விட்டு சென்றுள்ளார். அதன் பிறகு பிரிண்ட் அவுட் எடுப்பதற்காக மாணவி பள்ளி அருகே உள்ள கடைக்கு சென்றுவிட்டு பள்ளிக்கு திரும்பினார். இதை நோட்டமிட்ட 2 மர்ம ஆசாமிகள் மாணவியை வழி மறித்து வலுக்கட்டாயமாக வாகனத்திற்கு ஏற்றி மின்னல் வேகத்தில் அங்கிருந்து பறந்தனர்.அவர்களது வாகனம் டெல்லி& மும்பை நெடுஞ்சாலையில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றது. தன்னை காப்பாற்றும்படி மாணவி கதறியும் அந்த இடத்தில் யாரும் இல்லாததால் மாணவிக்கு எந்த உதவியும் கிடைக்காமல் போனது. 

4 வது படிக்கும் மாணவி கூட்டு பலாத்காரம்!! திடுக்கிடும் அதிர்ச்சி ரிப்போர்ட்!!

பின்னர் அங்கிருந்த ஒரு கட்டிடத்திற்கு 2 மர்ம ஆசாமிகளும் மாணவியை இழுத்துச் சென்றனர். அங்கு வைத்து மாணவிக்கு கூல்டிரிங்சில் மது கலந்து வலுக்கட்டாயமாக குடிக்க வைத்துள்ளனர். இதில் மாணவி பரிதாபமாக மயங்கி விழுந்தார். இதைத்தொடர்ந்து மாணவியை 2 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.பின்னர் மயங்கிக் கிடந்த மாணவியை மாலை 6 மணியளவில் ஜிரோட்டா என்ற கிராமத்தின் அருகே சாலையோரம் தூக்கி வீசிவிட்டு 2 காமுகர்களும் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் அந்த வழியில் சென்ற லாரி டிரைவர் மாணவியின் பரிதாப நிலையை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் மாணவியை விழிக்கச் செய்த லாரி டிரைவர், மாணவியின் தந்தை போன் நம்பரை வாங்கி தகவல் கொடுத்துள்ளார். இதைக் கேட்ட மாணவியின் தந்தை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகளின் நிலையை பார்த்து என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்தார்.  பின்னர் மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளை தந்தையிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

மாணவி பலாத்காரம்!! ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!! தமிழக ராணுவ வீரரின் வெறிச்செயல்!!

இதைக்கேட்டு கொதித்தெழுந்த மாணவியின் தந்தை அவரை முதலில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார். பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று மகளுக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்ற 2 பேரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.பள்ளிக்கு சென்ற மாணவி நடுரோட்டில் கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து பெற்றோர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web