2 குழந்தைகள் ஏரியில் மூழ்கி பலி!! திருவிழாவிற்கு பாட்டி வீடு சென்ற போது பரிதாபம்!!

 
ஏரி

கடலூர் மாவட்டம் பெண்ணாடம்  அடுத்த திருமலை அகரத்தில் உள்ள பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த் ஏரியில் சுற்றுப்புறத்தில் உள்ள கிராம மக்கள் குளிப்பது, துணி துவைப்பது என செய்து வருவது வழக்கம். பூவனூர் கிராமத்தில்  கூலித்தொழிலாளி சிவபெருமாள் - கன்னியாகுமரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.  இதில் முதல் 2 மகள்களும்  பெண்ணாடம் அடுத்த திருமலை அகரம் கிராமமான தமது பாட்டி ஊரில் நடைபெற்ற திருவிழாவிற்குச் சென்றனர். 

கடலூர்
நேற்று மாலை குளிக்க செல்வதாக சொல்லி சென்ற இருவரும் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர்,  உறவினர்கள் அவர்களை தேடத் தொடங்கினர். தீவிர தேடுதல் வேட்டையில்  திருமலை அகரத்தில் உள்ள பெரிய ஏரியிள் 17 வயது முத்துலட்சுமியும், 15 வயது சிவசக்தியும்  சடலமாக கிடந்துள்ளனர்.

கடலூர்
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த  உறவினர்கள் சடலத்தை மீட்டு வீட்டுக்கு எடுத்து வந்தனர். இச்சம்பவம் குறித்து பெண்ணாடம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாட்டி வீட்டிற்கு கோயில் திருவிழாவிற்காக வந்த 2 பெண் குழந்தைகள் ஏரியில் மூழ்கி உயிரிழந்ததால் திருமலை அகரம் கிராமத்தில் பெரும் பரபரப்பும், சோகமும் அடைந்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web