கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து 2 குழந்தைகளைக் கொன்ற கணவன்... மனைவியையும் கொன்று... தற்கொலைக்கு முயற்சி!

 
கடலரசு

குடும்ப தகராறில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கழுத்தை நெரித்து  கொன்று விட்டு மனைவிக்கு விஷம் கொடுத்து, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள என்.தட்டக்கல்  கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகன் கடலரசு (வயது 32).  . இவருக்கும், தர்மபுரி இவக்கியாட்டியை சேர்ந்த ஜனனி (23) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு திவான்ராஜ் (4) என்ற மகனும், நிவாந்திக்கா (2) என்ற மகளும் இருக்கினர். இதில் திவான்ராஜ் என்.தட்டக்கல் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நொடசுகப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடலரசுக்கும், ஜனனிக்கும் இடைகேருந்து வேறுபாடு இருந்து வந்நதாக தெரிகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வழக்கம்போல கணவன், மனைவிக்கு இடையே நாராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜனனி கணவரிடம் கோபித்து கொண்டு குழந்தைகளுடன் இலககியப்பாட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

Krishnagiri, Krishnagiri : கிருஷ்ணகிரி: காவேரிபட்டினம் அருகே போத்தாபுரம்  சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து | ஒருவர் படுகாயம்  ...

இரு குடும்பத்தினரும் கணவன் மனைவியை சமதானம் செய்து சேர்த்து வைத்தனர். இதனையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜௗனி  கிராமத்திற்கு வந்து கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று கடலரசு பெரியமலை தீர்த்தம் கோவிலுக்கு குடுபத்துடன் சாமி கும்பிட சென்றார். வழியில் மலை அடிவாரத்தில் வழங்கப்பட்ட பிரசாதத்தை வாங்கிய கடலரசு அதில் விஷம் கலந்து 2 குழந்தைகளுக்கும் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதை சாப்பிட்ட குழந்தைகள் 2 பேரும் அங்கேயே மயங்கி உயிருக்கு போராடினர்.  விஷம் கலந்த பிரசாதத்தை தின்றும் குழந்தைகள் சாகவில்லை என எண்ணிய கடலரசு 2 குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் மனைவி ஜனனிக்கும் விஷம் கலந்த பிரசாதத்தை கொடுத்து விட்டு, அவரும் தின்று தற்கொலைக்கு முயன்றார்.

குடும்ப தகராறில் கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து கொடுத்து 2 குழந்தைகள் கொலை; தந்தையின் கொடூர செயல்

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜனனி சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு இருந்த பொதுமக்கள் நாகரசம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  இதையடுத்து போலீசார் விரைந்து வந்து கணவன், மனைவி 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து போலீசார், இறந்த 2 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்


 

From around the web