அதிர்ச்சி... கனமழையால் இருவர் பலி... தலைநகரில் சோகம்... !!

 
மழை

தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக  கனமழை பெய்து வருகிறது. அதிலும் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கனமழை பல பகுதிகளில் வெளுத்து வாங்கி வருகிறது.  இந்நிலையில்  சென்னை அசோக் நகர் சாலையில் செல்போன் பேசியபடி நடந்துசென்ற மணிகண்டன்    திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார்.

மின்னல் பலி

இவருக்கு அருகில் இவரது  செல்போன் கருகிய நிலையில் கிடந்தது. அதனால் ஒரு வேளை இவர் மின்னல் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என  சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை மின்சார ஒயர் தாக்கி  உயிரிழந்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.  

மின்சாரம்

இதே போல் அஸ்ஸாமை  சேர்ந்த அப்பு அனிப் என்பவர், தி.நகரில் மின்கம்பம் அருகே மழைக்கு ஒதுங்கியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் . இவரது  திடீர் உயிரிழப்பு குறித்து  அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், அப்புவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  
 

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web