தனியார் நிறுவனத்தில் தீவிபத்தில் 2 பேர் பலி!! சென்னையில் சோகம்!!

 
தீவிபத்து

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில்  கேமரா, கணினி உதிரிபாகம் விற்பனை செய்யும்  தனியார் நிறுவனம் செயல்பட்டு  வந்தது. இன்று  இப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்தில் சிக்கி கோபிநாத், சதீஷ் என 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீவிபத்து
இன்று அதிகாலையில் திடீரென ஏற்பட்ட இந்த தீவிபத்தால்  2 ஊழியர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக  சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிபத்து
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு , தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web