விஷவாயு தாக்கி 2 பேர் பலி!! சென்னையில் தொடரும் சோகம்!!

 
விஷ வாயு


சென்னையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தூய்மை பணியாளர்கள் இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளார். சென்னை பெருங்குடி கீரின் ஏக்கர்ஸ் சாலையில் ஒருங்கிணைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அக்குடியிருப்பின் கழிவுநீர் தொட்டியை தூய்மை பணியாளர்கள் பள்ளிகரணையை சேர்ந்த பெரியசாமி, மற்றும் தட்சணாமூர்த்தி, ஆகிய இருவர் சுத்தம் செய்துள்ளனர்.  அப்போது முதலில் விஷவாயு தாக்கி பெரியசாமி மயங்கியுள்ளார்.

விஷவாயுவிஷவாயு

பின்னர் அவரை காப்பாற்ற முயன்ற தட்சணாமூர்த்தி கழிவு நீர் தொட்டியில் இறங்கிய போது அவரையும் விஷவாயு தாக்கி மயங்கியுள்ளார்.  இதனை கண்ட அருகில் உள்ளவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் வேளச்சேரியில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர் இருவரையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.


ஒருவர் நிகழ்விடத்திலேயே இறந்து விட, மற்றொருவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவரும்  உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இது குறித்து வழக்கு பதிவு செய்த பெருங்குடி போலீசார் விசரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web