கல்குவாரி வெடிவிபத்தில் 2பேர் பரிதாபப்பலி!!

 
மாரிமுத்து

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில்   தனியாருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது.இந்த கல்குவாயில் சுமார்  50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து   வருகின்றனர்.   இன்று பாறைகளை உடைப்பதற்காக வெடிவைக்கும் பணிகள் நடைபெற்றன.  அப்போது குவாரியின் மேல் பகுதியில் இருந்து கற்கள் சரிந்து வெடியின் மீது விழுந்தது.

கல்குவாரி

இதனால்  திடீரென அந்த வெடி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் வெடி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அரசம்பட்டி கிராமத்தில் வசித்து வரும்   நாராயணன் , சுந்தரபுரி கிராமத்தில் வசித்து வரும்  வேலு  இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன்  சுந்தரபுரி கிராமத்தைச் சேர்ந்த கோபால், மாரியப்பன்  இருவரும் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்சில்  ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆம்புலன்ஸ்
 இச்சம்பவம்  குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடமதுரை போலீசார் இறந்த இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web