+2 மாணவி தூக்கிட்டு தற்கொலை!! ஈரோட்டில் பரபரப்பு!!

 
தற்கொலை

தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள ரங்கநாதபுரம் செங்காடு பகுதியில் வசித்து வருபவர்  கிருத்திகா. இவர், நம்பியூரை அடுத்த கெடாரையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவரது தந்தை ராம கண்ணன். பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பிரியா. 

இதுவரை நடத்தி முடிக்கப்பட்ட  பிளஸ்டூ தேர்வை எழுதி முடித்து விட்டு விடுமுறை காரணமாக கிருத்திகா வீட்டிலேயே இருந்து வந்தார். வீட்டின் மீதும், தந்தை மீதும் கிருத்திகாவுக்கு அளவுக்கடங்காத பாசம் இருந்ததாக கூறப்படுகிறது.இதற்கிடையில் எதிர்பாராத விதமாக கிருத்திகாவின் தந்தை ராமகண்ணனுக்கு உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். விடுமுறையில் வீட்டில் இருந்த கிருத்திகா அவரை கவனித்து வந்துள்ளார். தந்தையின் உடல் நலம் சரியில்லாததை நினைத்து கவலையில் இருந்த கிருத்திகா மன உளைச்சலில் இருந்துள்ளார்.

தற்கொலை

இந்நிலையில் திடீரென்று கிருத்திகா தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டுக் தொங்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஓடிச்சென்று கிருத்திகாவை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே கிருத்திகா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் அழுது துடித்தனர்.

ஈரோடு
இது குறித்து தகவல் அறிந்த நம்பியூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து மாணவி கிருத்திகா தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். தேர்வு சரியாக எழுதவில்லையா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்த மாணவி, தந்தையின் உடல் நலம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web