+2 மாணவன் தூக்கு போட்டு தற்கொலை!!! தொடரும் சோகம்!!

 
நவீன்

சென்னை திருவேற்காடு, வி.ஜி.எஸ். நகர் பகுதியில் வசித்து வருபவர் வினோத். இவருக்கு 18 வயதில் திவாகர் என்ற மகன் இருந்தார். இவர், பிளஸ்2 தேர்வை சமீபத்தில் எழுதி முடித்தார். அதன் முடிவுகள் கடந்த மாதம் 20ம் தேதி வெளியானது. இதில் மாணவன் திவாகர் தமிழ், கணிதம் ஆகிய 2 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார் என்று கூறப்படுகிறது.

hanging suicide

இதனால் அவரது பெற்றோர் ஆறுதல் கூறி திவாகரை சமாதானம் செய்து வந்துள்ளனர். இருப்பினும் குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும் பேசாமல் திவாகர் தனியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் பெற்றோர் வெளியே சென்றுவிட்டதை உறுதி செய்து கொண்ட திவாகர் தேர்வு தோல்வியை எண்ணி வருத்தமடைந்து வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதைபார்த்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து அழுது துடித்தனர்.

dead body
பின்னர் இது குறித்து திருவேற்காடு போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். விரைந்துவந்த போலீசார்  வழக்குப்பதிவு செய்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து திவாகரின் குடும்பத்தாரிடமும், உறவினர்களுடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்2 தேர்வில் 2 பாடங்களில் தோல்வியடைந்த மாணவன் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web