கொசுவர்த்தியில் பற்றி எரிந்த தீயில் +2 மாணவி பலி!!! பகீர் பிண்ணனி!!

 
லூர்தியா

 

புதுச்சேரி மாநிலம் உழவர்கரை கான்வென்ட் வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியநாதன் (53). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மரிய லூர்தியா (52) என்ற மனைவியும், பிரான்கோ (28) என்ற மகனும், லூர்துமேரி (16) என்ற மகளும் உள்ளனர். இதில் லூர்துமேரி தனியார் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

தீவிபத்து

 வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த லூர்துமேரி மற்றும் அவரது தாய் மரியலூர்தியா உடலில் திடீரென தீப்பற்றி எரிந்து அலறித்துடித்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் மற்றொரு அறையில் இருந்த ஆரோக்கியநாதன், பிரான்கோ ஆகியோர் ஓடிவந்து இருவரையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டனர்.

இதையடுத்து அவர்களை சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மரியலூர்தியா, லூர்துமேரி ஆகியார் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

dead body

அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் லூர்துமேரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மரியலூர்தியாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீட்டில் கொசுபத்தி கொளுத்தியபோது ஏற்பட்ட தீயில் உயிரிழந்ததாக தெரிகிறது.

இருப்பினும் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில், ஆரோக்கியநாதன், மனைவியை கொலை செய்யும் நோக்கில் செயல்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web