கோர விபத்து.. 2 டிப்பர் லாரிகள் அடுத்தடுத்து மோதல்.. .7 பேர் சம்பவ இடத்திலேயே பலி!!
கர்நாடகா மாநிலம் ஹோஸ்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் பிமலிங்கப்பா . இவர் தனது குடும்பத்தினருடன் கார் ஒன்றில் குலஹல்லி பகுதியில் பசவேஸ்வரா கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். வியாஸ்நகரே ரயில் நிலையம் அருகே வந்தபோது அவ்வழியே வந்த டிப்பர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து சேதமடைந்த நிலையில் நின்றிருந்த கார் மீது பின்னால் வந்த டிப்பர் லாரிமீது அதிவேகத்தில் மோதியது.
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் பயணித்த 2 வயது சிறுவன் ஒருவன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். நீண்ட நேரம் போராடி, அப்பளமாக நொறுங்கி இருந்த காரில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 வயது சிறுவன், லாரி ஓட்டுநர்கள் பழனிச்சாமி, ராஜேஷ் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டிப்பர் லாரி ஓட்டுநர் அதிவேகத்தில் வந்ததே இந்த விபத்திற்கு காரணம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...