2 பெண்கள் தலைதுண்டிக்கப்பட்டு நரபலி!! கேரளாவில் பயங்கரம்!!

 
நரபலி

இந்தியாவில் நாகரீகம் வளர்ந்து விட்ட இந்த காலத்திலும் பல இடங்களில் கண்மூடித்தனமான  மூடப்பழக்க வழக்கங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் வசித்து வந்த 2 பெண்கள் பூஜைக்காக திருவல்லாவுக்கு அழைத்து வரப்பட்டு அங்கு வைத்து நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

நரபலி
விசாரணையில், நரபலி கொடுக்கப்பட்ட பெண்களில் ஒருவரின் பெயர் ரோஸ்லின் என்பதும் அவர் காலடியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மற்றொருவர் பத்மா என்பதும் அவர் கடவந்திர பொன்னுருண்ணியைச் சேர்ந்த பெண் என்பதும் தெரிய வந்தது.பத்மா தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் கொச்சியில் லாட்டரி சீட்டு விற்கும் தொழிலை செய்து வந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது.  

போலீஸ்

இந்நிலையில் இந்த 2 பெண்களையும் பெரும்பாவூரில் வசித்து வரும் முகம்மது ஷபி என்ற இளைஞர் அழைத்து வந்துள்ளார். மேலும் திருவல்லா இலந்தூரை சேர்ந்த வைத்தியன் பகவல்சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் 2 பெண்களையும் நரபலி கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி இந்த நரபலி தொடர்பாக திருவல்லாவைச் சேர்ந்த பகவந்த் சிங், அவரது மனைவி லைலா மற்றும் பெரும்பாவூரைச் சேர்ந்த முகமது ஷபி என்கிற ஷிஹாப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பெண்களை நரபலி கொடுத்தால், செல்வ செழிப்புடன் வாழ முடியும் மூட நம்பிக்கையில்  சிக்கித் தவிக்கும் மக்கள் இதுபோன்ற மூடநம்பிக்கைகளில் இருந்து வெளியே வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web