தீவிரமாகும் டெங்கு... 2 பெண்கள் பலி.. பீதியில் பொதுமக்கள்!!

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக ஏற்கனவே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் பருவகால நோய்களும் தொடங்கிவிட்டன. வழக்கமாக மழைக்காலங்களில் அச்சுறுத்தும் சளி, இருமல், காய்ச்சல், டெங்கு, மலேரியா என வரிசைக்கட்டத் தொடங்கிவிட்டன. மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர்.
தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இதன் பாதிப்பு அதிகரித்துவருகின்றன. அங்கு டெங்கு, மலேரியா என பருவ காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குவிகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி குருமாம்பேட் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் 19 வயது தனியார் கல்லூரி மாணவி காயத்ரி காய்ச்சல் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் ஒரு மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தர்மபுரி மேட்டுத்தெருவைச் சேர்ந்த வினோத்தின் மனைவி மீனா ரோஷினி டெங்குவால் பாதிக்கப்பட்டு செப்டம்பர் 8ம் தேதி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனால் புதுச்சேரி மாநிலத்தில் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் கல்லூரி மாணவி மற்றும் பெண் ஒருவர் பலியான சம்பவம் மக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!