திருக்குறள், உயிர் எழுத்துக்களை கூறி 2 வயது சிறுவன் சாதனை!!

 
திருக்குறள்

அஸ்ஸாமில் செயல்பட்டு வரும் இந்திய விமானப்படையில் பணியாற்றி வருபவர் ஜெகதீஸ்வரன். இவர் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் பகுதியில் வசித்து வருபவர் .திருமணமான ஜெகதீஸ்வரனுக்கு யாமினி என்ற மனைவியும், அகரமுதல்வன் என்ற 2 வயது சிறுவனும் உள்ளனர்.

திருக்குறள்

தமிழ் மொழி மீது பற்று கொண்ட ஜெகதீஸ்வரன், யாமினி தம்பதியர் தங்களது 2 வயது மகனை தமிழ் மொழி மீது பற்று கொண்டவனாக வளர்த்தனர்.அதன்படி திருக்குறள், தமிழ் உயிர் எழுத்துக்கள், தமிழ், ஆங்கில மாதங்களின் பெயர்கள், எண்கள், இந்தியில் 1 முதல் 10 வரையிலான எண்கள் ஆகியவற்றை கூறி சிறுவன் அகரமுதல்வன் அசத்தி வருகிறார்.

திருக்குறள் 3, தமிழ் உயிர் எழுத்துகள், வாரங்கள் மற்றும் மாதங்கள், எண்கள் (தமிழ், ஆங்கிலம், இந்தி), தமிழில் எண்கள் 1 முதல் 100 வரை தேசிய தலைவர்கள், பல்வேறு நாடுகளின் தேசிய கொடிகள், சமையல் பொருட்கள், உபகரணங்கள், படிப்பு உபரணங்கள், பிளாஷ் கார்டுஸ், ரைம்ஸ், பறவைகள், வாகனங்கள், விலங்குகள், பழங்கள், காய்கறிகள், உடல் உறுப்புகள் என்று கிட்டத்தட்ட 1000 எண்ணிக்கை வரையிலான பெயர்களை கூறி, கலாம் உலக சாதனையில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளான்.2 வயதேயான நிலையில் சிறுவன் ஒருவன் கலாம் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதால் அகரமுதல்வனின் பெற்றோர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web