போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 இளைஞர்கள் கைது!
கோவில்பட்டியில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி-பசுவந்தனைச் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே 2 இளைஞர்கள் நேற்று முன்தினம் இரவு கையில் அரிவாளை வைத்துக்கொண்டு மக்களை அச்சுறுத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது அங்கிருந்த இளைஞர்கள் போலீசாரை கண்டதும் அவர்களை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து பணி செய்ய விடாமல் தடுத்தனராம். இதையடுத்து போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போது அரிவாளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினராம்.

இந்நிலையில், இருவரையும் பிடித்து விசாரித்தபோது அவர்கள் பாரதி நகர் அம்பேத்கர் தெரு நடுத் தெருவைச் சேர்ந்த ரமேஷ் மகன் மணிகண்டன் (19), பாரதி நகர் 2 ஆவது தெருவைச் சேர்ந்த குமார் என்ற ராம்குமார் மகன் வேல்முருகன் (18) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நேற்று வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து, அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
