கே.டி.எம் பைக்கில் அதிவேகம்.. தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்.. சம்பவ இடத்திலேயே பரிதாப பலி..!!

 
அசீம் - ஹமீது

இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற 2 வாலிபர்கள் சாலையின் நடுவே இருந்த வேகத்தடை அறிவிப்பு பலகையில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரபீக் நகரை சேர்ந்த அசீம் (21), ஹமீது (22) ஆகிய இருவரும் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் இன்று பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, ​​அதிவேகமாக இளைஞர்கள் சென்ற இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதியது.

Bike accident

இதில் தூக்கி வீசப்பட்ட 2 வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இதுக்குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் ரூரல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 

Ambur, Tirupathur : ஆம்பூர்: கீழ்முருங்கை NH சாலையில் காலை கடனை  கழிப்பதற்காக லாரியை நிறுத்திவிட்டு சென்றபோது செல்போன், மணி பர்ஸ் திருட்டு |  Public App

பின்னர் உயிரிழந்த 2 வாலிபர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுக்குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

From around the web