ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 இளைஞர்கள் பலி!! குளிக்க சென்ற போது பரிதாபம்!!
சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சி நைனாம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் அர்ஜூனன். இவருடைய மகன் 24 வயது கௌதமன் . எடப்பாடி ஒன்றியம் ஆவணி பேரூர் கீழ் முகம் மசையன் தெரு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் ஐய்யப்பன் (29). பட்டறை தொழிலாளிகளான ஐய்யப்பனும், கவுதமனும் தங்கள் நண்பர்களான கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த 30 வயது சேட்டு, 32 வயது கார்த்திக் இருவரும் சரபங்காற்றில் குளிக்கச் சென்றனர்.
எடப்பாடி பகுதியில் தொடர் மழை காரணமாக சரபங்காற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் வழக்கமாக குளிக்கும் இடம் தானே என்று ஐய்யப்பனும், கவுதமனும் நண்பர்களுடன் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், கவுதமன் மற்றும் ஐய்யப்பன் ஆகிய இருவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது. அவர்களை காப்பாற்ற முயற்சித்த அவரது நண்பர்கள் முடியாத நிலையில் எடப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ராமன், எடப்பாடி இன்ஸ்பெக்டர் சந்திரலேகா மற்றும் போலீசார் சரபங்காற்றில் முகாமிட்டு நதியில் மூழ்கிய வாலிபர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். பேரிடர் மீட்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்களை கொண்டு, தண்ணீரில் மூழ்கிய வாலிபர்களை தொடர்ந்து தேடி வந்த நிலையில் இன்று காலை இளைஞர்கள் கவுதமன், ஐயப்பன் ஆகியோரின் உடல்களை தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர். எடப்பாடி அருகே சரபங்காற்றில் இளைஞர்கள் 2 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!